காலடி தாமரை
கேட்டுகொள்வது காதலில் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
என காதலின் பெருமையை இந்த வரிகள் உணர்த்தும்
வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை -அவள்
வந்ததுமே பறந்தோடும் காதல் தொல்லை |
எண்ணம் போல வாய்த்துவிட்டால் ஈடு இல்லை -வாழ்வில்
என்றைக்குமே இன்பத்திற்கு ஏது எல்லை
என்றெல்லாம் அந்த மெல்லியலாளை வர்ணிப்பான் |
அவள் தன்னைத்தானே
கன்னத்திலே பழத்தோட்டம்
கண்களிலே சதிராட்டம்
கட்டழகு பெண் சிரித்தால்
காளையர்க்கு[ள்] போராட்டம்
என வர்ணித்துக் கொள்வாள்
இப்படியெல்லாம் வர்ணனைக்கு உரியவளை வள்ளுவர் தன கண்முன்னே நிறுத்திக் கொண்டாரோ என்னவோ !
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம் வீழ்வேன் [1111]
அனிச்சமலரே நீ வாழ்வாயாக ! நீ மிகவும் மென்மைத் தன்மை உடையதாய் இருக்கிறாய் |ஆனால் என் காதலியோ உன்னைக் காட்டிலும் மென்மையானவள்
பாடலின் வரிகளோ
தத்தை போல தாவும் பாவை
பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத்தூவும்
வாடைக் காற்றும் உண்டு
என்ற பாடல் வரிகள் குறளை நினைவு படுத்தும்
பாடல்:பச்சைக்கிளி
படம் :உலகம் சுற்றும் வாலிபன்
இன்னொரு பாடலில்
தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால்
நான் பாய் விரிப்பேன் என்னை
என அவளின் மென்மையான பாதத்தை அனிச்ச மலருக்கு ஒப்புவமையாய்
கூறிய குறளை நினைவு கூறும்
பாடல்:தொடுதொடு எனவே
படம் :துள்ளாத மனமும் துள்ளும்
மேலும்
பூமகள் மெல்ல வாய் மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும் |
காலடி தாமரை நாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்
என்ற பாடலும்
பாடல்:பவழக் கொடியிலே
படம் :பணம் படைத்தவன்
பூவினும் மெல்லிய பூங்கொடி
என்ற பாடலும்
அந்த அனிச்சப் பூக் குறளை நம் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும்
பாடல்:பூவினும் மெல்லிய பூங்கொடி
படம் :கன்னிப்பெண்