Thursday 10 March 2016

Ithuthaan nilavo =இதுதான் நிலவோ

                                                      இதுதான் நிலவோ
                        நிலவை அழகிய முகத்தின் பிம்பமாய் பல்வேறு காவியங்களிலும் திரைப்பட பாடல்களிலும் அருமையாய்ச் சித்தரிப்பார்கள்  |நிலவைக் கண்டு
மலர்வதாகவும் சூரியனைக் கண்டு தாமரை மலர்வதாகவும் எண்ணற்ற காவியங்களில் பார்க்கலாம் |
                       நிலவிற்கும் அவள் வதனத்திற்கும்  வேறுபாடு காண முடியாமல்
குழம்பித்திரிவதை  அழகாய் பல காவியங்கள் சொல்லும் |
இங்கே திருக்குறளில்
                                     மதியும் மடந்தை முகனுமறியாப்
                                     பதியிற் கலங்கிய மீன்     [1116]
வானத்து நிலவிற்கும் இவளது முகத்திற்கும் வேறுபாடு காண முடியா நிலையில் விண்மீன்கள் கலங்கித் திரிகின்றன | நிலவைச் சுற்றி வட்டமிடும்
நட்சத்திரங்களானது நிலவையும் அவள் முகத்தையும் ஒப்பிடுவதே அமைந்துள்ளது |
                           கண்சிமிட்டும் தாரகைகள் வெண்ணிலாவே
                           உனைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே
என  நட்சத்திரங்களை நிலவின் தோழியராய் வர்ணித்துக் காட்டுவது ஒரு சிறப்பு |
மேற்படி குறளை  திரைப்பட  பாடல் நினைவு கூறும்
அது
                            இதுதான் அந்த நிலவா -என்று
                            முகம் பார்க்கும் வண்ணப் பந்து
                            இல்லை; இது முல்லை என்று
                            போராடும் கண்ணின் வண்டு
விளையாடி வரும் பந்துக்கும்  கண்ணின் [கரு]வண்டிற்கும்  அவள் முகம் நிலவாகவும் ,முல்லை மலராகவும் ,கண்டு வியக்கும் கற்பனைக் காட்சியாய்
பாடல் வரிகள் விளக்கும் |
பாடல்: பறக்கும் பந்து பறக்கும்
படம்  :பணக்காரக் குடும்பம்

மேற்படி திருக்குறளின்  கருத்தினை  ஒரு சோலையில் மலருக்கும் வண்டிற்கும்  உடன்பட்ட காட்சியாய் இங்கே விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று விளக்கும் | அங்கும்  நிலவு மலரை மறக்க வில்லை |துணைக்கு அழைக்கிறது |
தேனுண்ணும் வண்டு மதுதனை உண்டு
                                    தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
                                    தடங்கையில் எடுத்து முன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி                        [19]
                                    மலர்க்கரம் குவியும் என்ரஞ்சிப்
போனது வண்டோ பறந்தது பழம்தான்
                                    புதுமையோ எனப் புகன்றாள்
தாமரை மலரில் தேன் உண்ண வந்த வண்டு தேனை உண்டு அம்மலரின் மேலேயே மயங்கிக் கிடந்தது  |இதைக் கண்டவள் ஒருத்தி மலர்மேல் கிடப்பது வண்டு என்று எண்ணாமல் ,அது நாவல் பழம் என நினைத்து த்  தனது கையால் எடுத்தாள் | இவள் கையிலே எடுத்ததை கண்ட வண்டு ,வானத்து முழு நிலவு வந்துவிட்டது போல என்றெண்ணி தான் இருந்த தாமரை மலர்கள் மூடிக்கொள்ளுமுன்பு  வெளியே போய்விடவேண்டுமென்று பறக்க ,அப்படி அந்த வண்டு பறப்பதைப் பார்த்து ,பறப்பது வண்டோ பழமோ தெரியவில்லையே, இது என்ன புதுமை என்று வியந்தாளாம் அந்தப் பெண் |
             இப்படிக் குழப்பமான ஒரு காட்சியை  திரைப்பட பாடலொன்று
தாமரைப் பூவினுள் வண்டு வந்து
தேனருந்த  இதழ்  மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதற்போல்
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய் !
பாடல்:மெல்ல மெல்ல  மேனி
படம் :பணமா பாசமா
இன்னொரு பாடலில்
மது உண்ண மலர் தேடி வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா ?
பாடல்: நிலவோடு வான் முகில்
படம் :ராஜ ராஜன்
என்று சுவை படச் சொல்லும் |
























No comments:

Post a Comment