Tuesday 1 March 2016

Netru varai nee yaaro =நேற்று வரை நீ யாரோ

                                            நேற்று வரை நீ யாரோ
                             இயற்கை காட்சி நமக்கோர் சாட்சி
                             நம் ராஜாங்கம் நாள் தோறும் ரதி தேவன் ஆட்சி
                             இதழ் வாய் திறந்து கொடுத்தேன் விருந்து
                             என் மலர் மேனி நோகாமல் மெதுவாக அருந்து
                             பனிப்புல் மீது படுக்கை போட்டு
                             மணிப்பூங்கவிதை மனம் போல் தீட்டு
                             என அவனை மஞ்சத்திற்கு அழைக்கிறாள் காதலி
 அது சமயம் ,முன்னர் அவர்களுக்குள் பூத்திருந்த காதலை  அவர்கள் உள்ளங்கள் அசை போடுகிறது ; எங்கோ  பிறந்து எங்கோ வளர்ந்த அவர்கள்  இணைந்ததை நினைவூட்டுகிறது  இந்த காவியம்|
                                  யாயும் யாயும் யாராகியரோ
                                 எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
                                 யானும் நீயும் எவ்வழி அறிதும்
                                செம்புலப்  பெயல் நீர் போல
                                அன்புடை நெஞ்சம் தான்  கலந்தனவே
                   என செம்புலப் பெயல் நீராரின் காவிய வரிகள் அவர்கள் ஒன்று பட்டதை   உணர்த்துகிறது
இதையே
                                      நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
                                     இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
 என்ற திரைப்பட பாடல் வரிகள் சொல்கிறது
பாடல்; நேற்று வரை
படம் ;வாழ்க்கைப் படகு
செம்புலப்பெயல் நீர் போல  என்னும் வரிகளை
                                  வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
                                   நானொரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே
       என்ற பாடல் வரிகள் உணர்த்தும்
பாடல்:கொஞ்ச நேரம்  என்னை மறந்தேன்
படம் :சிரித்து வாழ வேண்டும்

                          செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
                          ஆனது நெஞ்சம் நீ என் வாழ்க்கையில் சொந்தம்
பாடல்:சோலைத்தீவில் மாலைத் தென்றல்
படம் :வெள்ளை ரோஜா
இதனையே விவேக சிந்தாமணிப் பாடலும்  அன்புக்கு இல்லை தூரமும் தொலைவும்  என்ற தலைப்பில்
மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும்       [56]
தாங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை தாமரை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆமதற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்காம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்  இதயம் விட்டு அகலாரே

50000 யோசனை தூரத்தில் உள்ள மழை முகில் கண்டு மயில் நடனமாடும் |
1லட்சம் யோசனை தூரத்தில் உள்ள சூரியன் முகம் பார்த்து தாமரை இதழ் மலரும் | அதற்கு இரண்டு மடங்கு தூரத்தில் உள்ள சந்திரனைக் கண்டு
சிவப்பு ஆம்பல் மலர்கள் பூத்திடும் |அன்பு  உள்ளங்களைத்  தூரம் பிரிப்பதில்லை |
என விளக்கம் தரும்
எங்கிருந்தோ  எத்தனையோ தூரத்திலிருந்து  பெய்யும் மழையானது
நிலத்தோடு சேர்வதையும் இந்தப் பாடல் வரிகள் உணர்த்துகிறது |
இதைப் பாடல் வரிகளோ
                            நம்பிய பெண் ஒரு தாரகை -அவள்
                            நாடிய நீ ஒரு வானகம்
என்றும்
பாடல்: காதல் சரித்திரத்தை
படம் :அவன் ஒரு சரித்திரம்

                                       நீ மேகம் ஆனாலென்ன
                                       நான் தோகை ஆன பின்னே
பாடல்: நீ மேகம் ஆனாலென்ன
படம் :தாயில்லாக் குழந்தை
என்றும்
                                         மழை நீ ............நிலம் நான்
                                         மயக்கமென்ன ....................
பாடல்:ஒரே நாள்
படம் :இளமை ஊஞ்சலாடுகிறது
போன்ற பாடல்கள் இரு காவியங்களையும் அப்படியே பிரதிபலிப்பதாய்
இருக்கும் |




























No comments:

Post a Comment