ஐம்புல இன்பங்கள்
மூன்று தமிழுமாய் முத்தமிழும்
நான்கு குணமுமாய் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பும்
ஐந்து புலன்களும் ஒருசேர உள்ளவளுமாய்
அமைந்து விட்டவள்தான் இந்த சித்திரப் பாவை
வான வில்லின் நிறம் எடுத்து
மேகம் எனும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால்
பிரம்மனால் எழுதப்பட்ட உயிரோவியம்தான் இந்தச் சித்திரப் பாவையின் உருவம் |
அச்சம் நாணம் என்ற நாலும்
அருகில் வந்தவுடன் அஞ்சும் -இதழ் [23]
பருகும் போது நெஞ்சம் ஆறும் -அது
பாடும் இன்பஸ்வரம் ஏழும்
என்று எண் வரிசையில் அவள் குணநலன்களையும் ,அவள் நெருக்கம் தந்த சுகத்தையும் அழகாய் வர்ணிக்கின்றான் கவிஞன் |
திருக்குறளிலோ ............. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள [1101]
என்பான் வள்ளுவன்
கண்ணால் கண்டும் ,காதால் கேட்டும் ,வாயால் உண்டும் ,நாசியால் நுகர்ந்தும் ,
மெய்யால் தீண்டியும் மகிழும் ஐம்புல இன்பங்களும் அழகிய வளையலணிந்த
இவளிடத்தில் உள்ளன
என பொருளுரைக்கும் |
மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ
என அவள் வினவ
நான்கு குணமும் சேர்ந்தது ஒரு பெண்ணிடமோ
என எதிர்க் கேள்வி கேட்கிறான் |
பாடல்:மூன்று தமிழ்
படம் : பிள்ளையோ பிள்ளை
இங்கே ஆணை முத்தமிழுக்கு ஒப்புவிப்பது ஓர் தனிச் சிறப்பு |
மேற்படி குரளின் வரிகளை ............
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
என்று அப்படியே தருகிறது
பாடல்:அவள் வருவாளா
படம் :நேருக்கு நேர்
மேலும் ஒரு பாடலில்
என்னதான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்
என ஆச்சரியமாக அவள் கேட்க
இங்குதான் தோன்றியது முத்தமிழ்ச் சங்கம்
என்று அவளைக் குறிப்பிட்டு அவன் சொல்கிறான்
பாடல்:புலவர் சொன்னதும்
படம் :ஆயிரம் பொய்
இன்னும்
அஞ்சனம் தந்தாள் நகை தந்தாள்
அச்சம் நாணம் மடம் தந்தாள்
எனப் புகழ்கிறான்
பாடல்:யார் யார் யாரவள்
படம் : பாச மலர்
இன்னொரு பாடலில்
நாலு வகை குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
பாடல்: வெண்ணிலா வானில்
படம் :மன்னிப்பு
என அவளின் நாலு வித குணத்தை அவளே பாடுவதாய் வருகிறது
மேலும் ஒரு பாடலில்
தத்தி வரும் தளிர் நடையில் பிறந்ததுதான் தாளமோ
தாவி வரும் கையசைவில் விழைந்ததுதான் பாவமோ
தெய்வ மகள் வாய் திறந்து இசைப்பதுதான் ராகமோ
இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ ..........
என முத்தமிழுக்கு உரியவளாய் நினைத்துப் பாடுவது இன்னும் சிறப்பு |
பாடல் அழகு தெய்வம் மெல்ல மெல்ல
படம் :பேசும் தெய்வம்
மூன்று தமிழுமாய் முத்தமிழும்
நான்கு குணமுமாய் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பும்
ஐந்து புலன்களும் ஒருசேர உள்ளவளுமாய்
அமைந்து விட்டவள்தான் இந்த சித்திரப் பாவை
வான வில்லின் நிறம் எடுத்து
மேகம் எனும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால்
பிரம்மனால் எழுதப்பட்ட உயிரோவியம்தான் இந்தச் சித்திரப் பாவையின் உருவம் |
அச்சம் நாணம் என்ற நாலும்
அருகில் வந்தவுடன் அஞ்சும் -இதழ் [23]
பருகும் போது நெஞ்சம் ஆறும் -அது
பாடும் இன்பஸ்வரம் ஏழும்
என்று எண் வரிசையில் அவள் குணநலன்களையும் ,அவள் நெருக்கம் தந்த சுகத்தையும் அழகாய் வர்ணிக்கின்றான் கவிஞன் |
திருக்குறளிலோ ............. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள [1101]
என்பான் வள்ளுவன்
கண்ணால் கண்டும் ,காதால் கேட்டும் ,வாயால் உண்டும் ,நாசியால் நுகர்ந்தும் ,
மெய்யால் தீண்டியும் மகிழும் ஐம்புல இன்பங்களும் அழகிய வளையலணிந்த
இவளிடத்தில் உள்ளன
என பொருளுரைக்கும் |
மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ
என அவள் வினவ
நான்கு குணமும் சேர்ந்தது ஒரு பெண்ணிடமோ
என எதிர்க் கேள்வி கேட்கிறான் |
பாடல்:மூன்று தமிழ்
படம் : பிள்ளையோ பிள்ளை
இங்கே ஆணை முத்தமிழுக்கு ஒப்புவிப்பது ஓர் தனிச் சிறப்பு |
மேற்படி குரளின் வரிகளை ............
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
என்று அப்படியே தருகிறது
பாடல்:அவள் வருவாளா
படம் :நேருக்கு நேர்
என்னதான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்
என ஆச்சரியமாக அவள் கேட்க
இங்குதான் தோன்றியது முத்தமிழ்ச் சங்கம்
என்று அவளைக் குறிப்பிட்டு அவன் சொல்கிறான்
பாடல்:புலவர் சொன்னதும்
படம் :ஆயிரம் பொய்
இன்னும்
அஞ்சனம் தந்தாள் நகை தந்தாள்
அச்சம் நாணம் மடம் தந்தாள்
எனப் புகழ்கிறான்
பாடல்:யார் யார் யாரவள்
படம் : பாச மலர்
இன்னொரு பாடலில்
நாலு வகை குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
பாடல்: வெண்ணிலா வானில்
படம் :மன்னிப்பு
என அவளின் நாலு வித குணத்தை அவளே பாடுவதாய் வருகிறது
மேலும் ஒரு பாடலில்
தத்தி வரும் தளிர் நடையில் பிறந்ததுதான் தாளமோ
தாவி வரும் கையசைவில் விழைந்ததுதான் பாவமோ
தெய்வ மகள் வாய் திறந்து இசைப்பதுதான் ராகமோ
இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ ..........
என முத்தமிழுக்கு உரியவளாய் நினைத்துப் பாடுவது இன்னும் சிறப்பு |
பாடல் அழகு தெய்வம் மெல்ல மெல்ல
படம் :பேசும் தெய்வம்
No comments:
Post a Comment