Sunday 7 February 2016

Anna nadai - அன்ன நடை

                                   அன்ன நடை 

                             குதித்தாடி மருண்டோடும் கலைமானோ -இளங்
                             குமரிகளும் மயங்கும் சிலை தானோ
                                                                                                                  என்றும்
                              வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை -அவள்
                              வந்ததுமே பறந்தோடும் காதல் தொல்லை
                              எண்ணம் போல வாய்த்துவிட்டால் ஈடு இல்லை -வாழ்வில்
                              என்றைக்குமே இன்பத்திற்கு எது எல்லை
         என்பதாகவெல்லாம் அந்த அழகுப் பெட்டகத்தின் எழிலை வர்ணிக்கிறான் காதலன் |
இங்கோ விவேக சிந்தாமணிப் பாடலொன்று
                          அன்னம் பழித்த  நடை ஆலம் பழித்த விழி
                                                                      அமுதம் பழித்த மொழிகள்
                          பொன்னம் பெருத்த முலை கன்னங் கருத்த குழல்
                                                சின்னஞ் சிறுத்த இடை  பெண்                                    [26]
                           என் நெஞ்சு உருக்க அவள் தன்  நெஞ்சு கற்ற கலை
                                                  என் என்று உரைப்பதினி நான்
                           சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி
                                               தெய்வங்களுக்கு அபயமே                                            [76]

என்று இனிதே சொல்கிறது
                 


              அன்னப் பறவையின் நடையைப் பழிக்கின்ற நடை அழகும் ,கொல்லு ம் விஷத்தை வெல்லுகின்ற கூறிய கண்களும் ,அமுதம் வெட்கும்படியான  இனிய வாய்ச்சொல்லும் ,பொன் போல நிறமுடைய பெரிய மார்பும்
கன்னங் கரேல் என்றிருக்கும் கருத்த கூந்தலும் ,சின்னஞ் சிறிய சிற்றிடையும் உடைய பெண் இவள் | என் நெஞ்சம் உருக வைக்கும் வித்தையை இவள் நெஞ்சு எங்குதான் கற்றதோ? இவளால் நான் படும் பாட்டை என்னென்று சொல்வேன் ! இந்தப்  பொல்லாத நான் படும் துயரத்தில் இருந்து  கடவுள் தான்
என்னைக் காப்பாற்ற வேண்டும்  என விளக்கம்  கொடுக்கிறது|
திரைப் பாடல்களோ
                                                  மின்னல் உருமாறி மண்மேலே
                                                                     கன்னியைப் போலே
                                                  அன்ன நடை பயிலக் கண்டேன்
                                                                       ஆசையினாலே
பாடல்:முல்லை மலர் மேலே 
படம்: உத்தம புத்திரன் 
ன்றும்
                                          அன்னம் போல நடை நடந்து வந்து -என்
                                          அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
என்றும்
பாடல்; என்னை விட்டு
படம் ; குமுதம்

                            அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
                            ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
                            இன்னிசையைப்  பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
                            இயற்கை எல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்
என்று  அன்னம் பழித்த  நடைக்குப்  பதில் சொல்லும் |
பாடல்: வண்ணத் தமிழ்
படம்  : பாவை விளக்கு
மேலும்
                                                   அமுதும் தேனும் எதற்கு ?   நீ
                                                    அருகினில் இருக்கையிலே எனக்கு
என்று அமுதம் பழித்த  மொழிக்கும்
பாடல்:அமுதும் தேனும் எதற்கு
படம் : தை பிறந்தால் வழி பிறக்கும்
           கொல்லுகின்ற விஷத்தை வெல்லுகின்ற கூரிய கண்கள்
                                           எத்தனை பெண் படைத்தான்
                                           எல்லோர்க்கும் கண் படைத்தான்
                                           அத்தனை கண்களிலும்
                                            ஆசை எனும் விஷம் கொடுத்தான்
என்று பாடுவது விவேக சிந்தாமணியின்  மேற்படி பாடலுக்கு உயிரூட்டும்
பாடல்: கடவுள் மனிதனாக
படம் : வானம்பாடி


















No comments:

Post a Comment