Monday 14 March 2016

Poovinum melliya poonkodi = பூவினும் மெல்லிய பூங்கொடி

                                           பூவினும் மெல்லிய பூங்கொடி 
ஆடச் சொன்னது  தேன் மலர் நூறு
அருந்தத் தருவது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பது யாரு
என்று பாடிய காதலன்  காதலியின் மென்மையைச்  சொல்ல வரும் போது
                                           பூவினும் மெல்லிய பூங்கொடி
                                            பொன்னிறம் காட்டும் பைங்கிளி
என்று வர்ணிக்கிறான் |அவளோ தன மென்மையை தானே சொல்ல வரும் போது
ராஜா ராணி ரகசியம்  எல்லாம் சொல்லுகின்றாள் -என்
ரோஜா இதழை லேசாத் தடவிக் கொல்லுகின்றாள்
தெற்குத் தென்றல் உன்னிடம் சொன்ன சங்கதி என்னம்மா ?-என்
சின்ன உடம்பை இருவரும் தொட்டால் என்கதி என்னம்மா ?
 என்று அங்கலாய்க்கிறாள் |
அவள் இடையின் மென்மையை  வள்ளுவர்
அனிச்சப்பூ கால்களையாள்  பெய்தால் நுசுப்பிற்கு
நல்ல படா அ  பறை                                        [1115]
இவள்  தன்  இடையின் மென்மையை உணராமல்  காம்பு களையாத அனிச்ச
மலரைத் தன் தலையில் சூடினாள்  |அதன் பாரம் தாங்காமல் இடை முறிந்தது
என்ற சொல்லே ஒலிக்கும் |
இதே கருத்தினை திரைப்பாடல் ஒன்று
பின்னிவைத்த கூந்தலில் முல்லைப் பூவைச் சூடினால்
கன்னி இடை பின்னத் தோன்றுமோ ?-சிறு
பின்னளிடை பூவைத் தாங்குமோ ?
என அப்படியே தருகிறது
பாடல்: சின்னச் சின்ன கண்ணிலே
படம்  :தேன் நிலவு
கன்பட்டதும் கை தொட்டதும் புண் பட்டதா இல்லையா ?
புன்பட்டதும் பெண்மை கொஞ்சம் பண்பட்டதா  இல்லையா ?
என வினவும் இவளின்  மென்மையைச் சொல்லவரும் காதலன்
முல்லை-மலர்ச் செண்டுகள் கொண்டு சதிராடுது
செண்டு சதிராடினால்  இந்த இடை தாங்குமா ?
என விளக்குகிறான் |
பாடல்: தங்கத்தில் முகமெடுத்து
படம்  :மீனவ நண்பன்
மேலும் மற்றொரு பாடலில்
தங்க ரதம் போல் வருகிறாள் -அல்லித்
தண்டுகள்  போலே வளைகிறாள்
என்பது பெண்மைக்கு முத்தாய்ப்பாய் அமையும் |
இடையின் பேரழகை  அவன் நாடும் சீர்வரிசைக்கு நிகராகச் சொல்வது இன்னும் சிறப்பு |
ஊரறிய மாலையிடுவாரோ -இல்லை
ஓடிவிட  என்னமிடுவாரோ
சீர்வரிசை தேடி வருவாரோ -இல்லை
சின்ன இடை எண்ணி வருவாரோ
என்ற பாடலில்
பாடல்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ
படம்  : பார்த்தால் பசி தீரும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
என்று இடையின் மென்மையை மென்மேலும் இந்தப் பாடல் உணர்த்தும் :குறளையும் நினைவு கூறும்|
பாடல்: ஆயிரம் நிலவே வா
படம்  :அடிமைப் பெண் 


















No comments:

Post a Comment