Tuesday 15 March 2016

Kan imaiyatha pen = கண் இமையாத பெண்

                                                 கண் இமையாத பெண் 
                       ஒரு பனித்துளி  தந்தால் பாற்கடல் செய்திடும் காதல்
                       ஒரு பாற்கடல் தந்தால் பனித்துளி ஆக்கிடும் காதல்
இந்தக் காதலின்  உன்னதத்தினாலோ  என்னவோ அவனுக்கு அவள் இங்கே
குழந்தையாய்த் தெரிகிறாள் |
                      குழி விழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா -உன்னை
                      குழந்தையாக்கி மடியில் வைத்து பாட்டுப் பாடவா
என்ற அவனுக்கு

                    மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா -அந்த
                   மயக்கத்திலே  சிறிது நேரம் கண்ணை மூடவா
என்று சொக்கிப் போகிறாள்
                                சொர்க்கம் என்பதொரு ஆறு
                                காதல் என்பதொரு தோணி
இந்த தேனாற்றில்  நீந்தி மகிழ்கின்ற காதல் கிளிகளில் ,காதலனுக்கு அவள்
இந்திர லோகத்து தேவதையாய்த்  தெரிகிறாள் |அதனால்  தான் அவன் , அவளிடம்
               இந்திர லோகத்தில் நான் வந்து தருவேன்  நாளொரு பூவீதம்
என்று பிதற்றுகிறான் }அது மட்டுமா ?
            வானில் ஒரு புயல் மழை வந்தால் -அன்பே எனை எங்கனம் காப்பாய்
என்று அவள் கேள்வி எழுப்ப
                              கண்ணே உன்னை கண்களில் வைத்து
                             இமைகள் எனும் கதவினை அடைப்பேன் |
என்று இனிதாய்ப் பதிலுரைப்பான்
இந்தச்  சுவையான உரையாடலைத்தான் அன்றே வள்ளுவர் ,
                     இமைப்பின் கரப்பார்க்கு  அறிவல்  அனைத்திற்கே
                     எதிலர் என்னும் இவ்வூர்                           1129
அதாவது
                           கண்ணுக்குள் இருக்கும் காதலர் தான் கண் இமைத்தால் மறைந்து போவதாய் அறிகிறேன்
எனப் பொருள் கூறும்
               பிரிந்து சென்ற காதலனின் வருகைக்கு காத்திருந்த அவள் வந்து சேர்ந்த காதலனைத் தன்  விழிச்  சிறையில் அடைத்து விட்டாள் , கண் திறந்தால்  அவர் போய்  விடுவார் , அதனால் கண் மூடிக் காத்திருந்தாளாம் ;              இந்தச் சுவையான கற்பனை வளத்தை அப்படியே தருவார் பாடலாசிரியர் |
                                                கண்விழித்துக் காத்திருந்தேன்
                                                கட்டழகர் குடி புகுந்தார்
                                                கண் திறந்தால் போய்  விடுவார்
                                                கண்மூடிக் காத்திருந்தேன்
எனக் குரலையும் உணர்த்தும் இந்த உன்னத வரிகள்
பாடல்: காத்திருந்தேன்  காத்திருந்தேன்
படம் :கைராசி
                          கண் இமையாத பெண் இவள் என்றால் 
                          காரணம் கூறுவதோ......
என ஒற்றை வரியிலும் இதே கருத்தினை வலியுறுத்தும் |
பாடல்: உனது விழியில் எனது பார்வை 
படம் :நான் ஏன்  பிறந்தேன் 

மேலும்
                                   மைவிழி வாசல் திறந்ததிலே -ஒரு 
                                   மன்னவன்  நுழைந்ததென்ன  
என்று சுவை படச் சொல்லும் |
பாடல்: காத்திருந்த கண்களே 
படம் :மோட்டார் சுந்தரம் பிள்ளை 






































No comments:

Post a Comment