Tuesday 8 December 2015

PORKALAMANAL = போர்க்களமானாள்

                                                            போர்க்களமானாள்
             காதலனோ அல்லது கணவனோ பிரிந்து சென்றால் உண்டாகும் துன்பம் சொல்லற்கரியது|அதிலும் இன்றைய கால கட்டங்களைப் போல் தொழில் நுட்பங்களோ விஞ்ஞான வளர்ச்சிகளோ இல்லாத அன்றைய கால கட்டங்களில்  பிரிவில் வாடும் உள்ளங்களுக்கு ,எண்ணப் பரிமாற்றங்களுக்கு வழியே இல்லை |

               அன்றைய நிலையில் வியாபாரத்திற்காகவோ  ,போருக்குப் போகும் போதோ என்று திரும்புவான் என்பதை உறுதிபடக் கூற முடியாத நிலையில் பிரிவுத் துயர் என்பது காட்டாற்று வெள்ளம் போல் கரை காண முடியாததாய் இருக்கும்|குறிப்பாக ,கணவன் போருக்குப் போகின்ற காலங்களில் அவள் மனது
                                             அவன் போருக்குப் போனான்
                                              நான் போர்க்களமானேன்
                என்று தனக்குள் வாழும் அந்தக்கால நினைவில் , அவன் என்ன ஓட்டமோ
                   வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
                   போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
என்று புலம்பும் |

               அந்தச் சூழலில் காதலர்களுக்கு மாதங்கள் வருஷங்களாக வும் நொடிப் பொழுது கூட வாரங்களாகவும் மாதங்களாகவும்  மாறி மாறத் தோன்றும் |
இதைத்தான் வள்ளுவர்
                          ஒரு நாள் எழுநாள் போற்செல்லும்  சேட்  சென்றார்
                          வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு                                        [1269]
            தொலைதூரம் சென்றுள்ள காதலர் திரும்பி வருகின்ற  நாளை நினைத்து
ஏக்கத்தோடு காத்திருக்கின்ற பெண்ணுக்கு ,ஒரு நாள் என்பது ஒரு வாரம்
போலத் தோன்றும் |
                                                                            இதைத்தான்  பாடல் வரிகள் ,,,,,,
                     வருஷங்களும் மாதம்  ஆகும் நானும் நீயும் கூடினால்
                     வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
                                                                    என்று குறள்  விளக்கத்தை அப்படியே தரும்
பாடல்:சுந்தரி சொன்னாள் ஒரு
படம்  :தளபதி
                மற்றொரு பாடலை மேலும் சுவையாக
                                       வருஷங்கள் நிமிஷம் ஆகும்
                                        நீ எந்தன் பக்கம் நின்றாலே
பாடல்:எனைக் காணவில்லையே நேற்றோடு
படம் :காதல் தேசம்

மேலும்
                                    உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
                                   பல மாதம் வருடம் என மாறும்
                                                                என்று அப்படியே பிரதிபலிக்கும்
பாடல்:வளையோசை கல கல
படம் :சத்யா
                  இப்படிச் சுவையான  பாடல்களை இயற்றிய பாடலாசிரியர்கள் எண்களை             வரிசைப்படுத்தி இயற்றியிருக்கும் பாடல்களில்
                                     நாலு வித குணமிருக்கும்
                                    அஞ்சுகின்ற மனம் இருக்கும்
                                    ஆறுகின்ற பொழுது வரை
                                    அனல் போல் கொதிப்பதெது
                                                                                                               என்றும்
                                      அச்சம் நாணம் என்ற நாலும் 
                                      என் அருகில் வந்தவுடன் அஞ்சும் -இதழ்
                                      பருகும் போது நெஞ்சம் ஆறும் -அது
                                      பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
                                                                                                                என்றும்
                            அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை -அந்த
                           அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
                                                                                                                 என்றும்
                             மூன்று தமிழ்  தோன்றியது உன்னிடமோ
                             நான்கு குணம்சேர்ந்தது ஒரு பெண்ணிடமோ
                 என்றும் அழகாய்த் தங்கள் கற்பனைச் சிறகை விரித்திருப்பர்






















No comments:

Post a Comment